மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 June, 2021 10:31 AM IST

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கவர்னரின் ஆங்கில உரையின் தமிழாக்கத்தை செய்து வருகிறார், மாநிலம் முழுவதும் உழவர் சந்தை தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டார். பெருந்தொற்றுக் காலத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் பேசப்பட்டது.

நேற்று தொடங்கிய தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் சம அரசியல் உரிமைகளை வழங்க இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும்.இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சட்டங்களின் கீழ் குடியுரிமை வழங்க தேவையான சட்ட திருத்தங்களையும் செய்யுமாறு தமிழக அரசு ஒன்றிய அரசை வற்புறுத்தும்.

பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொது சேவைகளை முறைப்படுத்த சேவைகள் உரிமை சட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.மேலும் விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதற்காக,கால்நடை பராமரிப்பு,இயற்கை வேளாண்மை,தோட்டக்கலை பயிர்கள் போன்ற வேளாண் தொடர்புடைய செயல்பாடுகளை ஊக்கமளிக்கப்படும்.

விவசாயிகளின் நலன் கருதி,விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் வேளாண்மைக்கு மட்டும் என தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யொப்டும். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படும்.அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளை முடித்திட அரசு தீவிரமாக உள்ளது.

முதல் நாள் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உரையாற்றினார்,இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. இன்று ஜூன் 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுவார்.

மேலும் படிக்க:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது

TN Govt: வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க தடை!

PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!

 

English Summary: A separate financial budget for agriculture
Published on: 22 June 2021, 10:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now