மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 May, 2022 9:19 PM IST
Engineering Colleges

தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில் இருந்து 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதால் மாணவர் சேர்க்கை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிகளவிலான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் பெற 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே அவை வரும் கல்வியாண்டில் இருந்து மூடப்படும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம்சார்பில் கூறும் போது, ‘‘போதிய அளவில் மாணவர்கள் இல்லாத காரணத்தால் வருகிற கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நாங்கள் இந்தமுறை நடத்தவில்லை என்று 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறி உள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 494 தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின் படி 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து படிக்க மாணவர்களுக்கு ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருவதாக பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவையாகவும், வேதனையாகவும் பல காட்சிகள் வெளிவருவதும், இது குறித்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதும் வாடிக்கையாகிவிட்டது துரதிருஷ்டவசமானது.

மேலும் படிக்க

ரூ.40 செலவில் 280 கி.மீ பயணிக்கலாம், கிராமத்தில் உருவாக்கப்பட்ட கார்

English Summary: Action order: Private engineering colleges will be closed in Tamil Nadu
Published on: 23 May 2022, 09:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now