News

Saturday, 05 March 2022 02:35 PM , by: R. Balakrishnan

Action to prevent minors from driving

18 வயதுக்கு குறைவானவர்கள், வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நடேசன் சாலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன், ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்தான். விபத்து நடந்தபோது, வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை.

இழப்பீடு (Relief fund)

ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய மனுவை, தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கண்ணம்மாள் பிறப்பித்த உத்தரவு: விபத்து நடக்கும் போது, மனுதாரருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அதை, தீர்ப்பாய விசாரணையின் போது, அவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, வாகனம் இயக்குவதற்கு சட்டப்படி தடை உள்ளது. நம் மாநிலத்தில், வயது குறைவானவர்கள் வாகனங்களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுகிறது;

பைக்' பந்தயம் (Bike Race)

'பைக்' பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். வயது குறைவானவர்கள், வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கும் வகையில், சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காத வகையில், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், அதற்கான வழிமுறைகளை கண்டறிவர் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை, இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை இல்லை. தீர்ப்பாய உத்தரவில் குறைபாடு இல்லை. மனு தள்ளுபடி செய்யப் படுகிறது.

மேலும் படிக்க

கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

வைப்பு நிதி வட்டியில் மாற்றம்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வருமானம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)