மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 January, 2021 2:35 PM IST
Credit : Hindu Tamil

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கரும்பு அறுவடையொடு இணைந்த வெள்ளம் தயாரிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் களைகட்டவரும் பொங்கல் பண்டிகையொட்டி அதன் முக்கிய அங்கங்களான கரும்பு, மஞ்சள் அறுவடையும், மண்பானை, வெல்லம் தயாரிப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வெல்லம் தயாரிப்பு

இப்பகுதிகளில் விளையும் கரும்புகள் அனைத்தும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள 300-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அச்சுவெல்லம், குண்டு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது.

வெல்லம் ஏலம்

புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெல்லம் ஏலம் விடப்படுகிறது. வெல்லத்தை ஏலம் எடுக்க உள்ளூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது.

பொங்கல் தொகுப்பில் வெல்லம்?

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்காமல் சர்க்கரை, ஏலக்காய், பச்சரிசி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ.2500 ரொக்கப் பணமும், முழு கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்து வழங்கி வருகிறது. இதனிடையே, பொங்கல் தொகுப்பு வழங்கும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்து வினியோகம் செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வெல்ல தயாரிப்பாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more...

விவசாயிகள் போரட்டம் : மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!!

திலேப்பியா மீன் வளர்த்து லாபம் பார்க்கலாம் வாங்க!!

பால் முதல் நெய் வரை அனைத்திலும் லாபம் சம்பாதிக்கலாம் - பசு மாடு வளர்ப்பு!

 

English Summary: Add sweetness to Pongal! preparation of jaggery Production runs busy in namakkal
Published on: 01 January 2021, 02:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now