News

Sunday, 19 February 2023 07:49 PM , by: T. Vigneshwaran

Cooking Oil Prce

விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.345 ஆக விற்கப்படுகிறது.

விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த மாதம் லிட்டர் ரூ.295 ஆக இருந்த நல்லெண்ணெய் ரூ.50 உயர்ந்து ரூ.345 ஆக விற்கப்படுகிறது. ரூ.195 ஆக இருந்த கடலை எண்ணெய் ரூ.30 உயர்ந்து ரூ.225 ஆக விற்கப்படுகிறது. ரூ.130க்கு விற்கப்பட்ட பாமாயில் ரூ.30 குறைந்து ரூ 100 ஆக விற்கப்படுகிறது. ரூ.175 ஆக விற்கப்பட்ட சன்பிளவர் ஆயில் ரூ.30 குறைந்து ரூ.145 ஆக விற்கப்படுகிறது.

வணிக வட்டாரத்தினர் தெரிவித்தபடி உற்பத்தி மற்றும் விற்பனைஅடிப்படையில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் எள், கடலை தட்டுப்பாட்டால் சமையல் எண்ணெய் விலை மேலும், உயர வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. தமிழகத்தில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து உள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி பயிர் இழப்பீடு

நகை பிரியர்களுக்கு குட்நியூஸ், தங்கம் விலை என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)