மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 September, 2020 11:15 AM IST

மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் தீவிர போராட்டங்களில் ஈடுபட விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் தமிழகத்திலும் விவசாய சங்கங்கள் போராட்ட முன்னெடுப்புகளை துவக்கியுள்ளன.

3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதால் அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக காவிரி வேளாண் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே பலன் தருவதாக உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த 3 மசோதாக்களையும் திரும்பப் பெறா விட்டால் அக்.2ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணவிரோதப் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் போது 3 மசோதாக்களையும் அரசு அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன? என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதோபோல் மேலும் சில விவசாய அமைப்பகளும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்  தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க..

அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் தடை- மத்திய அரசு அதிரடி!

பண்டிகை காலத்தை முன்னிட்டு சாமந்தி நாற்றுகள் விற்பனைக்கு தயார்- விவசாயிகள் கவனத்திற்கு!

English Summary: Against the agri bill - oct 2nd Protest announced by Tamilnadu farmers!
Published on: 21 September 2020, 10:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now