சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 2 May, 2022 8:58 PM IST
Agni Star starts from May 4
Agni Star starts from May 4

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் மே 4ம் தேதி துவங்குகிறது. இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் கோடை வெயில் உக்கிரம் காட்டத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்த வெயில் இன்னும் நீடிக்கும் என்பது போல நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் துவங்க உள்ளது. இந்த உச்ச பட்ச வெப்பக்காலம் 28ம் தேதி வரை நீடிப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கோடை வெப்பம் (Summer)

வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி மார்ச் முதல் மே வரை கோடை காலம். இதன்படி தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு அளவை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் அதிகபட்சமாக திருத்தணி மற்றும் வேலுாரில் 107 டிகிரி பாரன்ஹீட்டான 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. திருச்சி 41; மதுரை காஞ்சிபுரம் கரூர் பரமத்தி 40; சேலம் ஈரோடு மாதவரம் 39; சென்னை விமான நிலையம் தர்மபுரி தஞ்சாவூர் திருநெல்வேலி 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மேற்கண்ட 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கவனமுடன் கோடை வெயிலை எதிர்கொண்டு சமாளிப்போம்

மேலும் படிக்க

வீட்டின் வெப்பத்தை குறைக்க பசுமைச் சுவரை உருவாக்குவோம்!

வெப்பத்தை தணிக்க இதுவே அருமருந்து: கோடையின் வரப்பிரசாதம்!

English Summary: Agni Star starts from May 4: Attention Needed!
Published on: 02 May 2022, 08:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now