News

Monday, 30 June 2025 05:07 PM , by: Harishanker R P

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாபெரும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், ஜூன் 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நடைபெற்றது. உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய ரகங்கள், பாரம்பர்ய நெல் ரகங்கள், வருமானத்தைப் பெருக்க நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், களையெடுக்கும் கருவிகள், விளை பொருள்களை மதிப்புக்கூட்டும் கருவிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை,

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், பட்டு வளர்ப்புத் துறை உள்ளிட்ட பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. மதுரை, சேலம், தேனி, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, திருப்பூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூர் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)