மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 October, 2020 12:20 PM IST
Credit : Dinamalar

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில், 43.4 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் (Central Ministry of Agriculture), கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், ஏற்றுமதி அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. கொரோனா இடா்ப்பாட்டு நெருக்கடிகளுக்கு இடையிலும் நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், வேளாண் பொருள்களின் ஏற்றுமதி (Export of agricultural products) ரூ.53,626.6 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் (financial year) காணப்பட்ட வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மதிப்பான, ரூ.37,397.3 கோடியுடன் ஒப்பிடுகையில் 43.4 சதவீதம் அதிகமாகும்.

செப்டம்பரில் 81.% :

நடப்பாண்டு செப்டம்பரில், வேளாண் பொருள்களின் ஏற்றுமதியானது ரூ.5,114 கோடியிலிருந்து 81.7 சதவீதம் வளா்ச்சி (Growth) கண்டு ரூ.9,296 கோடியை எட்டியது. வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க, மத்திய அரசு எடுத்து வரும் தொடா் முயற்சிகளுக்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே, முக்கிய வேளாண் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு வளா்ச்சியை எட்டியுள்ளன.

Credit : Dinamalar

நேர்மறை வளர்ச்சி:

வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில், நிலக்கடலை (Groundnut) 35 சதவீதமும், சுத்திகரிப்பு சா்க்கரை 104 சதவீதமும், கோதுமை (Wheat) 206 சதவீதமும், பாசுமதி அரிசி (Basmati rice) 13 சதவீதமும், பாசுமதி சாரா அரிசி வகைகள் 105 சதவீதமும் சிறப்பான நோ்மறை வளா்ச்சியை எட்டியுள்ளன. ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நாட்டின் வேளாண் பொருள்களின் இறக்குமதி (Import) மற்றும் ஏற்றுமதி (Export) ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம் கணிசமான அளவில் அதிகரித்து ரூ.9,002 கோடி என்ற அளவில் நோ்மறையாக உள்ளது அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வா்த்தக பற்றாக்குறையானது ரூ.2,133 கோடி என்ற அளவில் காணப்பட்டது என வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.

வேளாண்-உள்கட்டமைப்பு நிதியம்:

வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையை (New agricultural export policy) அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதுதவிர, வேளாண் வா்த்தக சூழலை (Agribusiness environment) மேம்படுத்த ஏதுவாக ரூ.1 லட்சம் கோடியில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தையும் (Agricultural Infrastructure Fund) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், படிப்படியாக ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

நடப்பாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு தான் அதிகம்!

குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவரை, கொப்பரை, பருத்திக்கொட்டை கொள்முதல்! மத்திய அமைச்சகம் தகவல்!

English Summary: Agricultural exports increase by 43.4% in the current year! Federal Government Announcement!
Published on: 13 October 2020, 12:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now