News

Monday, 05 September 2022 09:23 PM , by: Elavarse Sivakumar

தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலை சிலிண்டர் மக்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ள நிலையில், 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்திருப்பது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படியொரு நாள் வருமா என இல்லத்தரசிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடன் தள்ளுபடி

தேபோல், விவசாயிகள் வாங்கியுள்ள ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் அந்த மாநில மக்களுக்குதான்.

ரூ.500க்கு சிலிண்டர்

விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள குஜராத்திற்கு சென்றுள்ள ராகுல், பூத் மட்டத்திலான கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியபோது, இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதாவது குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு காஸ் சிலிண்டர், 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகள் கடன் தள்ளுபடி, 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சி எம்.பி., ராகுல் கூறினார்.

வேலைவாய்ப்பு

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம், 3 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கட்டப்படும் என அடுத்தடுத்து அறிவிப்புகளையும் ராகுல்காந்தி வெளியிட்டார்.

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில், இவ்வாறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்படுவது வாடிக்கை என்றபோதிலும், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பும் உருவாகாமல் இல்லை. 

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)