அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 October, 2022 8:53 PM IST
Agricultural Science

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பல பகுதிகளில் இருந்து விவசாயிகள், தாவர ஆராய்ச்சியாளர்கள் வருகை புரிந்தனர். விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதத்தில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாதத்திற்கு ஒரு முறை, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறை தீர் கூட்டத்தில் பல பகுதிகளிலிருந்து விவசாயிகள், தாவர நோயியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள், வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொள்வார்கள்.

அந்த சமயத்தில் விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்வார்கள். விவசாயக் குறைதீர் கூட்டம் நடைபெறும் போது ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை சம்பந்தப்பட்ட கண்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

திண்டிவனத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக கண்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் இயற்கை உரங்கள், இயற்கை திரவியங்கள், இயற்கை முறையில் வளர்ந்த மாஞ்செடிகள், கொய்யா செடிகள், உளுந்து விதைகள், நுண்ணூட்ட கலவைகள், உரங்கள் போன்ற பொருள்கள் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக அந்தந்த பருவத்திற்கு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கண்காட்சி திடல் அமைந்தது. குறிப்பாக விழுப்புரத்தில் பிரதான பயிராக சவுக்கு மரங்கள், நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இரண்டிலும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அதனை எப்படி தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க உரைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:

தொடர் மழையால் நிரம்பிய கண்மாய்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிப்பு

English Summary: Agricultural Science Fair for Farmers
Published on: 29 October 2022, 08:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now