நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 December, 2021 5:30 AM IST
Agriculture laws will not come back

வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் மீண்டும் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி உருவாக்கும் குழப்பத்தில் விவசாயிகள் யாரும் சிக்கிட வேண்டாம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதியளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், சில காரணங்களால் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அடுத்துவரும் காலங்களில் முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

சர்ச்சைப் பேச்சு (Controversial speech)

காங்கிரஸ் கட்சியோ மத்திய அரசு திரும்பப்பெற்ற வேளாண் சட்டங்களை வேறுவடிவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிவித்ததது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து பின்னர் நாடாளுமன்றத்திலும் மசோதா தாக்கல் செய்து திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆனால், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மீண்டும் வராது (Not Come Back)

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்தியஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதி்ல் கூறியதாவது:

நாட்டின் விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். மத்திய அரசுக்கு வேளாண் சட்டங்களை திரும்பக் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளை மறைக்க எதிர்மறையான பிரச்சாரம் செய்து, விவசாயிகளைக் குழப்புகிறது. இந்த குழப்பத்தில் விவசாயிகள் சிக்க வேண்டாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க

1 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்: புதிய திட்டம் துவக்கம்!

பிரதமர் மோடி அறிவித்த உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்!

English Summary: Agriculture laws will not come back: Narendra Singh Tomar
Published on: 27 December 2021, 05:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now