News

Friday, 13 May 2022 08:06 AM , by: R. Balakrishnan

வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காவிரி டெல்டா (Cauvery Delta)

இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது. காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி வருகிறோம். விவசாயத்திறகு மிக முக்கிய பகுதியாக இருந்தாலும், பல்வேறு நெருக்கடிகளும் உள்ளது.

விவசாயத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு ஆலைக்கும் தி.மு.க., அரசு அனுமதி வழங்காது. விவசாயத்திற்கு தி.மு.க., அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க

இயற்கை முறை தேயிலை சாகுபடி: சுற்றுலாப் பயணிகளின் ரசிக்கும் கொழுக்கு மலை!

மண்ணில்லா விவசாயம்: குறைந்த செலவில் காய்கறி சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)