மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 October, 2020 7:39 PM IST
Credit :Daily Thanthi

விவசாயிகளுக்கு தரமான நல்ல விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என கோவை சரக விதை பரிசோதனை அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார்.

விதை பரிசோதனை

கோவை வேளாண் சரக விதை பரிசோதனை அலுவலர் கணேசன், திருவாரூர் மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்டு அதன் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை குறித்து ஆய்வு செய்தார். பிற ரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகள் மற்றும் பெறப்படும் மாதிரிகள் உரிய காலத்தில் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் தாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் முழுமையாக கேட்டறிந்தார். விதை முளைப்பு திறன் அறையில் கடைபிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி அளவு மற்றும் முளைப்புத்திறன் சோதனை நாற்றுக்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

விவசாயிகளுக்கு தரமான விதைகள்

ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறியாதவது, பணி விதை மாதிரிகள் தரத்தினை துல்லியமாக ஆய்வு செய்து முடிவுகளை வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிர் சாகுபடி செய்யலாம் என்றார். மேலும் விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிய பணிவிதை மாதிரிக்கு உட்படுத்தி ரூ.30 கட்டணத்தை செலுத்தி விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்து கொள்ளலாம் என்றார்.

மேலும் படிக்க...

இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகள் நல நிதி வாரியம் அமைப்பு!

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்

விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!

English Summary: Agriculture officials advices to Farmers about the Qulaity of seeds to obtain high yields
Published on: 09 October 2020, 07:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now