மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 October, 2021 4:48 PM IST

முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி எண்டோஸ்கோப் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநில ஊரக உள்ளாட்சியில் காலியாக இருந்த இடங்களுக்கான இடைத் தேர்தலில் ஆளும் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி, நேற்று (அக்டோபர் 20) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் கூறினார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 21) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அது தொடர்பான எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதே எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு எண்டோஸ்கோப் சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. பழனிசாமி காலை 6:30 மணியளவில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அறை எண் 11ல் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை தொடர்பாக எண்டோஸ்கோப் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி குணமடைந்து தொடர்ந்து தீவிர அரசியலில் இயங்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் தகவல்!

13 மாவட்டங்களில் மழையின் அட்டகாசம்! விவரம்!

English Summary: AIADMK leader admitted to Edappadi Palanisamy Hospital
Published on: 21 October 2021, 04:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now