மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 November, 2020 5:27 PM IST

அகில இந்திய வேளாண்மை நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி காளீஸ்வரி தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் ஆண்டு தோறும் வேளாண்மை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு அகில இந்திய அளவில்
நுழைவுத் தேர்வு நடத்துகிறது.

முடிவுகள் வெளியீடு (Entrance Results)

இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தத் தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயின்ற 300 இளங்கலை மற்றும் 200 முதுகலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகள் இடம் பிடித்துள்ளனர்.


இப்பட்டியலில், பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியைச் சேர்ந்த மு. காளீஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். செல்வி. டீ. பவித்ரா, வேளாண் சமூக அறிவியல் துறையில் இரண்டாமிடத்தையும்,செல்வி. பூஜா சக்திராம், வேளாண் பொறியியல் துறையில் மூன்றாமிடத்தையும்,கே. ஏ. அருட்செல்வம், நீர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிவில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை அதிகபட்சமாக 185 இடங்களைப் பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

விவசாயத்தை வாழ்க்கையாகப் பார்த்தால் ஏமாற்றமே இல்லை!!

TNAU விஞ்ஞானி கே.எஸ். சுப்ரமணியத்திற்கு தேசிய விருது!

குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!

English Summary: All India Agricultural Entrance- TNAU student tops nationally!
Published on: 11 November 2020, 05:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now