சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 March, 2025 11:07 AM IST

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

விவசாயத்தை நம்பியுள்ள இப்பகுதியில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயிகள் பலரும், அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேலைவாய்ப்புக்காக வெளியூர்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

எனவே, விவசாயத்தை காக்கும் வகையில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வரவணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்களை தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள நரேந்திரன் திட்டமிட்டார். அதன்படி, சொந்த ஊருக்கு வந்திருந்த நரேந்திரன், கரூர் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் இந்தப் பகுதியில் உள்ள மத்தியமடை குளம், கோட்டபுளியப்பட்டி மணியார் மடைகுளம், கீ.த.வெள்ளப்பட்டி தலையாரி குளம், சுண்டுகுழிப்பட்டி வேலன்குளம் என 5 குளங்களை சொந்த செலவில் தூர் வாரியுள்ளார். தற்போது பாப்பான் குளத்தை தூர் வாரும் பணியை நரேந்திரன் அண்மையில் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து நரேந்திரன் தெரிவித்தது: அரசுப் பள்ளியில் பயின்ற நான் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறேன். விவசாயத்தை காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எனது சொந்த கிராமத்தில் நீர் வளத்தை பெருக்கும் வகையில் குளங்களை தூர் வாரும் பணிகளை முன்னெடுத்து வருகிறேன்

இப்பகுதியில் உள்ள 16 குளங்ளை தூர் வார திட்டமிட்டு இதுவரை 5 குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளன. தற்போது 6-வது குளம் தூர் வாரப்பட்டு வருகிறது. இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, விவசாயம் காக்கப்படும் என்றார்.

Read more: 

வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை துறை மூலம் தரமற்ற விதை- 90% மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்பு

English Summary: American IT worker dredging ponds in Karur to protect agriculture
Published on: 27 March 2025, 11:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now