மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 December, 2020 1:48 PM IST

தமிழக அரசின் விலையில்லா ஆடு மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கென நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 4000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் நாட்டுகோழிகள் விரைவில் வழங்ப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

விலையில்லா ஆடு மாடு வழங்கல் திட்டம்

கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான பயனாளிகள், கிராமசபை கூட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்திற்கு 4000 பயனாளிகள் தேர்வு

கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்காக 16 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 3,784 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கப்படவுள்ளன. அதேபோல் எட்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளும் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த, 16 கிராமங்களில், 3,784 பயனாளிகள், விலையில்லா ஆடுகள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 8 கிராமங்களில், 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.

 

நாட்டு கோழிகள் வழங்கவும் திட்டம்

அதேபோல், மாவட்டம் முழுவதும், 4,800 நாட்டுக் கோழிகள் வழங்கவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பயனாளர்களுக்கு அடுத்த மாதம் கால்நடை வளர்ப்பு பயிற்சி பயனாளிகளுக்கு அளிக்கப்படும். தொடர்ந்து, கால்நடைகள் கொள்முதல் செய்யப்பட்டு, ஜன., மாதத்துக்குள் பயனாளிகளுக்கு வழங்கி முடிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் - அமைச்சர் தகவல்!!

மானிய விலையில் விதை 'பாக்கெட்' - காய்கறிகள் உற்பத்தியை பெருக்க திட்டம்!!

 

English Summary: Animal Husbandry department of Coimbatore Decided to implement the scheme of providing free goats and cows by January the Beneficiaries list are Ready
Published on: 04 December 2020, 01:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now