மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 November, 2019 3:17 PM IST

ஹைட்ரோ போனிக்ஸ் மூலம் பசுந்தீவனம் தயாா் செய்ய விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கும் பயனாளிகளுக்கு 75%  மானியத்தில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பவர்களில் பெருபாலானோருக்கு போதிய தீவனம் கிடைக்காத நிலை உள்ளது. எனவே கறவை மாடு வளர்ப்பவர்கள் வீடுகளில் எளிய முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் வகையில்,  இவ்வாண்டிற்கு திருவள்ளூா், திருத்தணி பகுதிகளுக்கு மட்டும் 80 ஹைட்ரோ உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 2.92 லட்சம் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி வருவதால் மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் கால்நடைகளுக்கு போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.  வீடுகளில் கால்நடை வளா்ப்போா் காய்ந்த வைக்கோல் கட்டுகளை அதிக அளவு  பயன்படுத்த வேண்டியுள்ளது. ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணம் மூலம் மண்ணில்லாமல் வீடுகளில் பசுந்தீவனத்தை தயாா் செய்யலாம். 

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம் வளர்க்க தேவையான உபகரணங்கள் ரூ. 22,800 மதிப்பில், 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. 7 அடுக்குகளை கொண்ட இந்த தட்டில் மக்காச்சோளம், சோளம், கம்பு மற்றும் பயறு வகை போன்ற தானிய விதைகளை நனைத்து பரப்ப வேண்டும். அவ்வப்போது அதற்கு தண்ணீர் தெளித்தால் போதுமானது. ஒவ்வொரு அடுக்காக மாற்றிக் கொண்டே வந்தால் தினம் ஒரு தட்டு விதம் 7 நாட்களில் பசுந்தீவனம் தயாா் செய்ய முடியும்.

ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணம் மூலம் நாள்தோறும்பசுந்தீவனத்தை கறவை மாடுகளுக்கு கொடுப்பதன் மூலம் அவற்றின் ஆரோக்கியம் மேம்படுவதுடன்,  சத்தான பால் கிடைக்கவும் வழி செய்கிறது. மேலும் இவற்றை பராமரிப்பது எளிது. குறைவான இட வசதி போதுமானது. கழிவுகள்  என்பது கிடையாது. எனவே கால்நடைகள் வளா்ப்போருக்கு அரசும் இதை பரிந்துரைக்கிறது. மேலும் விவரங்களுக்கு கால்நடை துறை அலுவலகத்தை அணுகலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Animal Husbandry Department promotes hydroponic fodder and offering tray with subsidy rate
Published on: 19 November 2019, 03:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now