மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 June, 2021 4:41 PM IST

பொதுமக்களின் நலன் கருதி, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு குறைகிறது (The vulnerability decreases)

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம், அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால், படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இதையடுத்து, ஊரடங்கில் மேலும் சிலத் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டீக்கடைகள் இயங்கலாம் (Tea shops can run)

கொரோனாத் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகள் நாளை முதல் இயங்கலாம். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இனிப்பகங்களுக்கு அனுமதி (Allow for Sweet Stals)

  • பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

இ-சேவை மையங்கள் (E-Service Centers)

பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

அலுவலகங்கள் (Offices)

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

92 சதவீதம் பேர் மீண்டனர் (92 percent recovered)

இதனிடையே தமிழகம் முழுவதும் 23,39,705 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 21,48,352 பேர் குணமடைந்துள்ளனர்.92 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் 5,24,085 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5,06,454 பேர் குணமடைந்துள்ளனர். 97 சதவீதம் அளவுக்கு கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க...

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!

English Summary: Announcement of some more relaxation in curfew - Tea shops allowed to operate from tomorrow!
Published on: 13 June 2021, 04:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now