News

Friday, 12 May 2023 11:14 AM , by: R. Balakrishnan

Ration Card

இந்தியாவில் ரேசன் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் ரேசன் அட்டை வைத்திருப்பது தற்போது அவசியமாகி விட்டது. இப்போது மக்கள் ஆன்லைன் வாயிலாகவே, இந்த ரேசன் கார்டினை பெறும் வசதியை மாநில அரசு வழங்கி உள்ளது.

ரேசன் கார்டு (Ration Card)

இந்தியாவில் ரேசன் கார்டின் மூலம் ஏழை மற்றும் எளிய பொதுமக்கள் மாதந்தோறும் மலிவான விலையில், உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் நிலவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் மாநில அரசுகள், ரேசன் கடையின் வாயிலாக பொதுமக்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கியது.

இந்நிலையில் பலரும் ரேசன் கார்டை பெற முயற்சித்து வருகின்றனர். தற்போது ரேசன் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்கும், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ரேசன் கார்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ரேசன் கார்டை பொதுமக்கள் அந்தந்த மாநில அரசின் இணையதளத்தின் வாயிலாக, எளிதாக விண்ணப்பித்து பெற முடியும். ஆதார் அட்டையைப் போலவே, ரேசன் கார்டிலும் அனைத்து சுய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் தமிழ்நாட்டில் ரேசன் கார்டில் QR CODE முறை வரை பல அப்டேட்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம் வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர் தமிழக அரசு ஊழியர்கள்!

இவர்களுக்கு மட்டும் ரயிலில் பயணிக்க 50% கட்டண சலுகை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)