News

Tuesday, 23 July 2019 11:58 AM

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு: தமிழ்நாடு வனத்துறை

பணி: வனக்காவலர்

காலிப்பணியிடம்: 564

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bit.ly/2JYegpZ, https://bit.ly/30Qprry

முக்கிய தேதிகள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 10 2019

ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஆகஸ்ட் 10 2019 , மாலை 5 மணி வரை

இந்தியன் வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஆகஸ்ட் 12 2019

வயது வரம்பு:

பொது பிரிவினருக்கு (general) குறைந்த பட்சம் 21 வயது, அதிகபட்சம் 30 வயது.

எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி (SC/ST/OBC) பிரிவினருக்கும் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த பட்சம் 21 வயது, அதிகபட்சம் 35 வயது.

கல்வித் தகுதி:

குறைந்த பட்சம் பொது கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு  முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:  

கணினி வழித்தேர்வு

உடற்தகுதி தேர்வு

உடற்திறன் தேர்வு

மொழி:

கணினி வழித்தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்

மாத ஊதியம்

தகுதியானவர்களுக்கு குறைந்த பட்சம் 16,600 முதல் அதிக பட்சம் 52,400 வரை மாத சம்பளம்.

இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்கள் அறிய குறிப்பிட்டுள்ள https://bit.ly/2JYegpZhttps://bit.ly/30Qprry அதிகாரப்பூர்வ இணையதளத்தை   பார்க்கவும்.  

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)