News

Thursday, 27 August 2020 06:22 PM , by: Daisy Rose Mary

Credit: First avenue wealth

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக 4% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள், கிசான் கிரெடிட் கார்டு என பல்வேறு திட்டங்கள் மூலமாகவும் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகளுக்கு முற்றிலுமாக வட்டியே இல்லாமல் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0% வட்டியில் கடன்! - Zero interest

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி ஹரியானா மாநில அரசு தற்போது விவசாயிகளுக்கு 0% வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டி சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மாநில அரசுகளின் பங்கு - Centre and state share 

விவசாயக் கடன்களுக்கு பொதுவாக 7% வட்டி வசூலிக்கின்றன. இதில் 3% வட்டியை மத்திய அரசும், 4% வட்டியை மாநில அரசும் பகிர்ந்துகொள்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 0% வட்டியில் கடன் வழங்க முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நேரடியாக வங்கியிலேயே கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.


கிரெடிட் கார்டு வசதி உண்டு - Kisan Credit card 

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இதேபோல, கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கும் கிரெடிட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பு தொழில் செய்யும் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க... 

"Uzhavan app" மூலம் வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெறுவது எப்படி? முழு வழிமுறைகள் இங்கே!

Kisan Credit card: கிசான் கிரெடிட் கார்டு கடனை ஆகஸ்ட் 31-க்குள் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?

ஆகஸ்டு 31-க்குள் உங்கள் பயிரை காப்பீடு செய்திடுங்கள் - மாவட்ட வாரியன பயிர்களுக்கான காப்பீடு விவரம் உள்ளே!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)