News

Tuesday, 14 December 2021 08:34 PM , by: R. Balakrishnan

Pollution free

மாசற்ற அலுவலக வாரம் கடைப்பிடிக்கப்படுவதால் அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, நடந்தே தன் அலுவலகத்துக்கு சென்றார். தமிழ்நாடுமாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படி, மாசற்ற அலுவலக வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நடைபயணம் (Walking)

அனைத்து அரசு துறை உயர் அலுவலர்கள், தனி நபர்கள் மோட்டார் வாகனங்களை தவிர்க்குமாறு தலைமை செயலர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, அரியலுார் கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று காலை 10:00 மணியளவில், தன் முகாம் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நடை பயணமாக (Walking) வந்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர், டபேதார் உள்ளிட்டோரும் அவருடன் நடந்து வந்தனர்.

மாசற்ற அலுவலக வாரம் (Pollution free Office Week)

மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள், மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெளி இடங்களில் இருந்து வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சைக்கிளில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரூ.39 கோடி ஒதுக்கீட்டில் 1.77 கோடி மரக்கன்றுகள் நட தமிழக அரசு முடிவு!

வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)