சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 12 April, 2019 5:01 PM IST

மக்காச்சோளதின் பிறப்பிடம் அமெரிக்கா ஆகும். 16 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு  உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. தற்பொழுது இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பெருமளவில் பயிரிட படுகிறது. கோடை காலத்திற்கு ஏற்ற பயிராகும். குறைத்த அளவு நீர் தேவைப்படும். சொட்டு நீர் பாசனம் இதற்கு ஏற்றதாகும்

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் பயிரிட ஏற்றதாகும்.

பயிரிட ஏற்ற பருவம்

ஜனவரிபிப்ரவரி

ஏப்ரல்மே

ஜீன்ஜீலை

செப்டம்பர்அக்டோபர்

நிலத்தை பண்படுத்துதல்

 நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு உழவு செய்து நிலத்தை தயார் படுத்த வேண்டும்.

விதையின் அளவு

ஏக்கருக்கு 6 கிலோ விதைகள் வரை பயன்படுத்தலாம்.

நீர் பாசனம்

விதை ஊன்றிய உடன் நீர் ஊற்ற வேண்டும். அதன் பின் சொட்டு நீர் முறையில் நீர் பாய்ச்சுவது போதுமானதாகும். பின்னர் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுவது போதுமானதாகும்.

அறுவடை

அறுவடைக்கான காலஅளவு 110 நாட்களாகும். 60 முதல் 70 நாட்களுக்குள் கதிர் விளைந்திருக்கும்.100 நாட்களில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகி இருக்கும். இந்நிலையில் நீர் பாசனத்தை நிறுத்த வேண்டும். பத்து நாட்கள் கழித்து அறுவடை செய்து கொள்ளலாம்.

படைப்புழு, கட்டுப்படுத்தும் முறை

 தமிழகத்தில்  தற்போது படைப்புழு தாக்குதல் அதிகமாக இருக்கிறது. இந்தப்புழுவானது இலை, குருத்து, பயிர் மற்றும் மண்ணுக்குள்ளும் சென்று செடியினை தாக்குவதால் கட்டுப்படுத்துவது என்பது சற்று சிரமமானதுஇருப்பினும் பெவேரிய, பேசியான,மெட்டாரைசியம் , பேசில்லஸ் மற்றும்  ன்.பி . வைரஸ், ட்ரைக்கோகிரம்ம, ஒட்டுண்ணி, பொறிவண்டுகள் போன்றவை  படைப்புழுவினை கட்டுப்படுத்தும்.

 மக்காச்சோளம் பயிரிடும் முன் ஒரு முறை உழவு செய்தல் இப்புழுக்கள் வெளிவரும், மற்ற உயிரினங்கள் அவற்றை உண்பதால் இயற்கையான முறையில் படைப்புழுக்கள் அழிந்து விடும்

English Summary: Armyworm Control in Maize
Published on: 12 April 2019, 05:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now