நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 May, 2022 7:23 PM IST
At least interested in getting the corona vaccine!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா முற்றிலும் குறைந்து தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் மக்களிடம் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் 37 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 36 ஆயிரத்து 800 க்கு மேற்பட்டோர் குணமாகினர். 665 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தினமும் குறைந்தது 500 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.

சில வாரங்களாக தொற்று இல்லாத மாவட்டமாக திண்டுக்கல் மாறி உள்ளது. அதேநேரம் முன்புபோல் மக்கள் இப்போது முகக்கவசம் அணிவது இல்லை. இதேபோல் தடுப்பூசி செலுத்துவதில் இருந்த ஆர்வமும் மக்களிடம் குறைந்து விட்டது.

தடுப்பூசி (Vaccine)

இதுவரை 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணையில் 18,27,000, 2வது தவணையில் 15,94,000பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 15--18 வயதிற்கு உட்பட்டவர்களில் முதல் தவணை 81,000, 2வது தவணை 61,000, 12--14 வயதிற்கு உட்பட்டவர்களில் முதல் தவணை 59,000, 2வது தவணை 36,000 பேர் செலுத்தி உள்ளனர்.

3 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் உள்ளனர். மே 8ல் நடந்த 3 ஆயிரம் முகாமில் முதல் தவணை 8,381, 2வது தவணை 41,437 பேர் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ் 2,445 பேர் மட்டுமே செலுத்தினர். கொரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரை மக்கள் தடுப்பூசி செலுத்தி பாதுகாப்போடு இருப்பது அவசியம்.

விழிப்புணர்வு (Awareness)

கொரோனாவை அழிக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து 750 நாட்களுக்கு மேல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். தடுப்பூசி செலுத்துபவர்களை ஊக்குவிக்க மரக்கன்று வழங்கி ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போட வைத்துள்ளேன். கொரோனா நம்மை விட்டு முழுமையாக நீங்கவில்லை. தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் முன்பு இருந்தது போல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளைப் பின்பற்றுதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறிய அலட்சியமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

மேலும் படிக்க

கொரோனா புதிய அலைக்கு வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!

English Summary: At least interested in getting the corona vaccine!
Published on: 11 May 2022, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now