நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 May, 2022 11:32 AM IST

அட்சயத் திருதியை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாயின. இதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளில் தங்கம் வாங்க முடியாததால், இந்த முறை நகைகளை வாங்கிக்குவிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

அள்ள அள்ளக் கொடுக்கும் அட்சயப் பாத்திரத்தை அடிப்படையாகக் ஆண்டுதோறும் மே மாதம், அட்சயத் திருதியை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தங்கம் வாங்கினால், செல்வம் மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.

தமிழகம் முழுதும் உள்ள, 35 ஆயிரம் நகைக் கடைகளில் தினமும் சராசரியாக, பழைய மற்றும் புதிய தங்க நகைகளின் விற்பனை, 10 ஆயிரம் கிலோவாக உள்ளது. அக் ஷய த்ருதி தினத்தை முன்னிட்டு, மே 3ம் தேதி முன்னணி நகைக் கடைகள் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும் கூட, கூடுதல் தள்ளுபடி, குறைந்த செய்கூலி, பரிசு பொருட்கள் என, பல்வேறு சலுகைகள் முன்கூட்டியே அறிவித்தன.

கொரோனா பாதிப்பால், இரண்டு ஆண்டுகளாக கடைகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக தங்கள் வாங்கியோர், தற்போது நகை கடைகளுக்கு நேரடியாக சென்று, தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர். அவர்களின் வசதிக்காக, அதிகாலை முதலே நகை கடைகள் திறக்கப்பட்டன.
வாடிக்கையாளர்கள் வெயிலில் சிரமப்பட கூடாது என்பதற்காக, நகைக் கடைகளுக்கு வெளியில் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடிநீர் பாட்டில், மோர், குளிர்பானங்கள், டீ, காபி போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன.

விலையில் சரிவு

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போரால், முந்தைய வாரங்களில், 40 ஆயிரம் ரூபாயை தாண்டிய 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, நேற்று 38 ஆயிரத்து 368 ரூபாயாக குறைந்திருந்தது.
இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு 856 ரூபாய் சரிந்திருந்தது, வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதனால், ஏற்கனவே பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தவர்களும், நேற்று கூடுதல் பணம் செலுத்தி, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நகைகளை விட அதிக எடையில் தங்க நகைகளை வாங்கினர்.

18 ஆயிரம் கிலோ

நகை சேமிப்பு திட்டங்களில் மாதம்தோறும் பணம் செலுத்தி வந்தவர்களும், அவற்றை ரத்து செய்து, நேற்று நகைகளை வாங்கினர்.
நேற்று ஒரே நாளில், 18 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, ஒரு கிலோ தங்கம் விலை 50 லட்சம் ரூபாய். இதன்படி, நேற்று மட்டும் 9,000 கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகி உள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, கடைகளில் விற்பனை நடக்கவில்லை. 'ஆன்லைன்' வழியே நடந்த விற்பனையில், 12 ஆயிரம் கிலோவுக்கு மக்கள் நகை வாங்கினர். அதற்கு முந்தைய ஆண்டு, 5,000 கிலோ விற்பனையானது. இதேபோல் நாடு முழுவதும், ஒரே நாளில் ரூ.15,000 கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டன.

மேலும் படிக்க...

பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!

பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!

English Summary: Atchayathruthi Special - Gold sales worth Rs 15,000 crore across the country!
Published on: 04 May 2022, 10:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now