News

Friday, 18 September 2020 06:40 AM , by: Elavarse Sivakumar

வாடிக்கையாளர்களுக்கு ATM மில் பணம் எடுப்பதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ATM கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கும் வசதியை SBI வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

அவசரத் தேவைக்காக பணம் எடுக்கச் செல்லும்போது, ATM கார்டை மறந்துவிடுகிறோமல்லவா! அத்தகைய சந்தர்ப்பத்தில் பயன்படுவதற்காக, ATM விதிகளில் மாற்றத்தைப் புகுத்தியுள்ளது SBI.

டெபிட் கார்டு இல்லாமல்

ஏடிஎம் கார்டு இல்லாத நேரத்தில் பணம் எடுப்பதற்கு  மொபைல் போன்களிலேயே வசதிகள் உள்ளன. பல்வேறு வங்கிகள் மொபைல் ஓடிபி (Mobile OTP) மூலமாகவே பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது யோனா ஆப் (Yono -app) மூலமாக இந்த வசதியை வழங்கி வருகிறது.
வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே இப்படி பணம் எடுக்க முடியும்.

அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் மட்டுமே இவ்வாறு பணம் எடுக்க முடியும். பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வசதி எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை எடுப்பதற்கு மட்டுமே பொருந்தும். தற்போத அமலுக்கு வந்துள்ள இந்த சேவையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்களில் மட்டுமேப்பெற முடியும்.

மேலும் படிக்க...

அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!

உருளைக்கிழங்கை உங்கள் வீட்டு மாடியிலும் வளர்க்கலாம் - சாகுபடிக்கான யுக்திகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)