மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 January, 2022 8:20 AM IST
ATM service tariff hike

வங்கிகளின் ஏ.டி.எம்., (ATM) சேவைக்கான கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்தக் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி யும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு (Tarrif Hike)

ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அந்த வங்கியின் ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தில் மாதம் ஐந்து முறை கட்டணமின்றி நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை பெறலாம். அத்துடன் பிற வங்கிகளின் நகர்ப்புற ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், கிராமப்புற ஏ.டி.எம்.,களில் ஐந்து முறையும் இலவசமாக நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை பெறலாம்.

இந்த வரம்பிற்கு மேற்பட்ட ஒவ்வொரு சேவைக்கும் தலா 20 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 1 ரூபாய் உயர்த்தப்பட்டு, 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜி.எஸ்.டி.,யும் வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஏ.டி.எம்., மையத்தின் நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டி, இந்த கட்டண உயர்வை ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ஆறரை ஆண்டுகளுக்கு பின், ஏ.டி.எம்., சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி!

வங்கி மோசடிகள் அதிகரிப்பு: RBI அறிக்கை!

English Summary: ATM service tariff hike comes into effect!
Published on: 02 January 2022, 08:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now