மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 December, 2020 8:01 PM IST
Credit : Dinakaran

கோவையில் இருந்து பெங்களூரு வரை விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை, பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum) நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பர் 15ம்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

உடன்படிக்கை: 

போராட்டம் நடத்திய விவசாயிகளுடன், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் ஒப்புதல் (Approval) இல்லாமல், விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் எதுவும் செய்யப்படாது என உடன்படிக்கை (Agreement) கையெழுத்தானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், விவசாயிகளுக்கு எதிராக பாரத் பெட்ரோலிய நிறுவனம், விளைநிலங்களில் அளவீடு பணியை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதனைக் கண்டு கவலையடைந்த விவசாயிகள், மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்தனர்.

கால்நடைகளுடன் போராட்டம்:

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர், பட்லூர் எளையாம் பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள், வருவாய் துறையினருடன் (Department of Revenue) வந்து விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி, விளைநிலங்களில் அளவீடு (Measurement) செய்யும் பணியினை மேற்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், உடன்படிக்கையை மீறிய பெட்ரோல் நிறுவனத்தின் செயலை கண்டித்து, அங்கு வயலில் இறங்கி கருப்பு கொடி ஏந்தியும், கால்நடைகளுடனும் (Livestock) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் வகையில், அரசு இத்திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச சட்ட உதவி! உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவிப்பு!

கனமழையால் ஏரி உடைப்பு!சரிசெய்த விவசாயிகள்!

English Summary: Attempt to install petroleum pipe in farmland in violation of agreement! Farmers struggle with livestock!
Published on: 06 December 2020, 07:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now