News

Monday, 27 February 2023 10:46 AM , by: R. Balakrishnan

Attention Pensioners

நாடு முழுவதும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் மற்றும் மொத்த தொகையை பெற சில ஆவணங்களை பதிவேற்றுவது கட்டாயம் என தேசிய ஓய்வூதிய அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள் பதிவேற்றம்

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஓய்வு காலத்திற்கு பின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வெளியான அறிவிப்பின் படி ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் பயனாளர்கள் ஓய்வூதியம் அல்லது மொத்த தொகையை பெற சில ஆவணங்களைப் பதிவேற்றுவது கட்டாயமாகும்.

அந்த வகையில் சந்தாதாரர்கள் NPS வெளியேறுதல்/ திரும்பப் பெறுதல் படிவம், திரும்பப் பெறுதல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று, வங்கி கணக்கு ஆதாரம், PRAN அட்டையின் நகல் போன்றவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது சந்தாதாரர்களின் நலனுக்காகவும், வருடாந்திர வருமானத்தை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருப்பதால் இந்த நடைமுறையை கட்டாயமாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தேசிய பென்சன் திட்டம்: பயனாளிகளுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)