News

Sunday, 13 November 2022 07:22 PM , by: T. Vigneshwaran

Cancer

விருதுநகரில் ANT அறக்கட்டளை மற்றும் விருதுநகர் லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குழந்தை பருவ புற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.

விருதுநகர் நகராட்சி தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10.11.2022 அன்று ANT கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் விருதுநகர் அரிமா சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோய்கள் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியை, “இக்காலத்தில் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப பை வாய் புற்றுநோய் பற்றிய புரிதல் இல்லை. அதற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

நிகழ்வில் பேசிய ஏ.என்.டி அறக்கட்டளை தலைவர் டாக்டர் தி.ஜெயராஜ சேகர் பல்வேறு புற்றுநோய்களை பற்றியும் அவற்றை எப்படி குணப்படுத்துவது மற்றும் வராமல் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி மாணவிகளுக்கு விளக்கினார்.

இதுகுறித்து பேசிய தங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு வகையான புற்றுநோய்கள் பற்றியும் அது எவ்வாறு ஏற்படுகிறது என்பது பற்றி இந்நிகழ்வு வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது என்றும். புற்றுநோயும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொண்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க:

விவசாயிகள்: சம்பா நெல் பயிர் காப்பீடு எடுத்துட்டீங்களா

தமிழக அரசு: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரிய அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)