News

Tuesday, 30 August 2022 08:19 PM , by: T. Vigneshwaran

Smartphones Banned

சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரூ.12,000க்கும் குறைவான ஸ்மார்ட்ஃபோன்களை இந்தியா தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த செய்தி உண்மை அல்ல என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுத்துள்ளார்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், இந்திய செல்போன் சந்தைகளில் சீனா நிறுவனங்களான ரியல்மி, ஷாவ்மி, ஓப்போ, விவோ போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் செல்போன்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவுடன் பல்வேறு விதமாக சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.லடாக் எல்லையில் சீனா திடீரென்று ஆக்கிரமிப்பை தொடங்கியதால் இந்தியா-சீனா வீரர்கள் மோதிக்கொண்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் ஆயிரக்கணக்கில் வீரர்களை குவித்துவைத்துள்ளது.

அத்துடன் சீனாவுக்கு பதிலடி தரும் விதமாக சீன நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, ஹூவாய், zte போன்ற நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வழங்கவும் மத்திய அரசு அனுமதி மறுத்தது. மேலும், சமீப காலமாக சீன ஸ்மார்ட்போன்களின் வர்த்தக பரிவர்த்தனைகளை மத்திய அரசு கண்காணித்தது. அதில் அந்நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய்களை வரி ஏய்ப்பு செய்வது தெரியவந்தது.

அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாகவும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரூ.12,000க்கும் குறைவான ஸ்மார்ட்ஃபோன்களை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் படிக்க:

இனி வாட்ஸ் அப்பில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்

மதுரை மக்களை ஈர்க்கும் மூங்கில் தோட்டம் உணவகம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)