மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 December, 2021 7:51 PM IST
Banana trees in floating in rain water

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், அருகே கனமழையால் 500 ஏக்கர் வாழை தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மிதக்கும் வாழை மரங்கள் (Floating banana trees)

சாயர்புரம் அருகே உள்ள பெரும்படை சாஸ்தாவின் கோவில் பகுதியில் விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் வாழை விவசாயம் செய்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், வாழைவெட்டி ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஓடுகிறது. இந்த ஓடையில் ஏற்பட்ட உடைப்பால், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 500 ஏக்கர் வாழையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்ற வழியில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனால் வாழைகள் அழுகி சேதமடையும் நிலை உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பெரும்படை சாஸ்தாவின் கோவிலிலிருந்து ஆறுமுகமங்கலம் செல்லும் கல்பாலத்தை மூழ்கடித்து மழைநீர் அதிகளவில் செல்வதால் இந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை (Request)

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,‘ இப்பகுதியில் உள்ள ஆறுமுகமங்களம் குளத்தை தூர்வாராததால் தண்ணீரை தேங்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் அருகிலுள்ள வாலைவெட்டி ஓடையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் காட்டாற்று வெள்ளத்தில் வரும் மழை தண்ணீரும் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வாழை நிலங்களுக்குள் புகுந்துள்ளது.

இந்த வகையில் 500 ஏக்கர் வாழை தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் சில நாட்களுக்கு தண்ணீர் தேங்கினால் வாழைகள் அழுகி விளைச்சல் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. முறையாக வாழை வெட்டி ஓடையை சீரமைத்தால் பழையகாயல் வழியாக கடலுக்குச் மழைநீர் சென்றுவிடும். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் படிக்க

தக்காளியைத் தொடர்ந்து கத்தரிக்காய் விலை உயர்வு!

மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Banana trees floating in rainwater: Farmers suffer!
Published on: 01 December 2021, 07:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now