மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 June, 2022 8:00 AM IST
Bananas ripened by chemical spray

பெரிய மார்க்கெட்டில் வாழைத் தார்களை பழுக்க வைக்க இரசாயன ஸ்பிரே அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட வேண்டும். இரசாயன முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. ஆனால், பழங்களை பழுக்க வைக்க 'எத்தனால்' என்ற வேதிப்பொருளை பயன்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

இரசாயன ஸ்பிரே (Chemical Spray)

பெரிய மார்க்கெட் பாரதி வீதியில் வாழைப் பழங்களை பழுக்க வைக்க ஸ்பிரே முறையில் இரசாயனத்தை தெளிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், கடை ஊழியர் ஒருவர், பொதுமக்களின் எதிர்ப்பினை மீறி வாழைத் தார்கள் மீது எத்தனாலை துளியும் பயம் இல்லாமல் ஸ்பிரே செய்கிறார். அதனை மற்றொருவர் எடுத்து வண்டியில் ஏற்றுகிறார். அதனை கண்ட பொதுமக்களின் ஒருவர் தட்டிக் கேட்கிறார்.

'இப்படி செய்ய வேண்டாம், மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், மீறி ரசாயன ஸ்பிரே செய்தால் கலெக்டரிடம் புகார் அளிப்பேன்' என்கிறார். ஆனால், அந்த கடை ஊழியரோ, 'எத்தனையோ பேர் இங்கு வந்து பார்த்துட்டாங்க... கலெக்டர் வந்து என்ன ஆக போகுது...' என்று அலட்சியமாக கூறியபடியே மீண்டும் வாழைத் தார்கள் மீது எத்தனாலை பீய்ச்சி அடிப்பத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

துணிச்சல் (Bravery)

இதனையடுத்து, இரசாயன கலவை தெளிப்பை தட்டி கேட்டவர், 'புதுச்சேரியில் எல்லாம் வீணாகி விட்டது. தவறெல்லாம் மறைமுகமாக செய்கிற காலம் மலையேறி, இன்றைக்கு தவறுகளை நேரடியாக செய்யும் காலம் வந்து விட்டது. அதுவும் பொதுமக்கள் மத்தியில் செய்யும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டது. இதை கலெக்டரிடம் நேரடியாக பொன்மொழியாக கூறி பார்க்கிறேன்' என்று நொந்தபடியே அங்கிருந்து செல்கிறார். மாவட்ட கலெக்டரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என, நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க

மண்வளத்தைப் பெருக்க சிறந்த வழி ஆட்டுக் கிடை போடுதல்!

இதை தெரிஞ்சிகிட்டா வாழை இலையை நீங்க விடவே மாட்டிங்க!

English Summary: Bananas ripened by chemical spray: Harm to the body!
Published on: 26 June 2022, 08:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now