News

Wednesday, 03 August 2022 08:00 PM , by: T. Vigneshwaran

Bank Loan with Subsidy

இந்தக் கடன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெற்றோரின் வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவை தேவை.

மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் தொடங்கும் வகையில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படும். கடன் தொகையில் 20 சதவீதம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும்.

இந்தக் கடன் தொகையை 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோர் குழந்தைகளின் பெற்றோரும், 18 வயதுக்கு மேற்பட்ட தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தக் கடன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெற்றோரின் வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க: 

468 மது கடைகள் மூடல், சரக்கு மது பிரியர்கள் கடும் அவதி

PM Awas Yojana திட்டத்தில் வீடு யாருக்கு கிடைக்கும், வெளியான பட்டியல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)