நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 September, 2022 6:10 PM IST
Basil ready for harvest

தேனி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துளசி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விசேஷ நாட்களில் துளசியின் விலை எகிரும் என்ற எதிர்பார்ப்பில் துளசி விவசாயிகள் அறுவடைக்கு காத்திருக்கின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் சில குறிப்பிட்ட ஏக்கர் பரப்பளவில் துளசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பயிரிட்டு செப்டம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் வகையில் கூடலூர் பகுதி விவசாயிகள் துளசி சாகுபடி செய்துள்ளனர்.

துளசி மருத்துவ பயன்பாடு மற்றும் கோயில் பூஜைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கோயில்களில் நடைபெறும் பூஜைக்கு பயன்படுத்தவும் நெருங்கி வரும் ஆயுத பூஜை திருவிழாவை முன்னிட்டும் கூடலூர் பகுதியில் விளைந்துள்ள துளசியை அறுவடை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

தினசரி வருவாய் தரக்கூடிய பயிராக துளசி இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் துளசி பயன்பாடு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் புரட்டாசி மாதத்தின் போது அறுவடைக்கு தயாராகும் வகையில் துளசி சாகுபடி செய்வதாக கூடலூர் பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர்.

பராமரிப்பு மற்றும் பாசன முறை எளிது என்பதால் கூடலூர் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் துளசி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர் . தற்போது கிலோ 30 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் நிலையில் புரட்டாசி விசேஷ நாட்களில் கிலோ 50 ரூபாய்க்கு துளசி விற்பனையானால் துளசி விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகும் என்கின்றனர் விவசாயிகள்.

மேலும் படிக்க:

அரசு: குருவை பயிர் விதைகளுக்கு 90 முதல் 100% மானியம்

விவசாயிகளுக்கு தீபாவளிக் பரிசு, அரசு 35,250 ரூபாய் வழங்கும்

English Summary: Basil ready for harvest, farmers waiting for good price
Published on: 23 September 2022, 06:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now