சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 May, 2019 3:59 PM IST

வேளாண் பொருட்கள் மற்றும்  பதப்படுத்த பட்ட பொருட்களுக்கான ஏற்றுமதி  7 % அதிகரித்து உள்ளதாக (APEDA) தெரிவித்துள்ளது. இந்த நிதி ஆண்டிற்கான முதல் அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த  ஆண்டைவிட இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் உணவு பொருட்கள் ஏற்றுமதியானது  7 % அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டில் (2017-2018) நடப்பு ஆண்டில் ரூ 1.28  கோடி  அதிகரித்துள்ளது. குறிப்பாக பால் சார்த்த பதப்படுத்த பட்ட பொருட்கள், பருப்பு வகைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட சற்று குறைந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களின் ஏற்றுமதி Rs 1,955 கோடி , இல் இருந்து Rs 3,376 கோடியாக உயர்ந்துள்ளது. அதே போன்று பருப்பு வகைகள் Rs 1,470 கோடியில் இருந்து Rs 1,795 கோடியாக உயர்ந்துள்ளது. பால் பொருட்கள் 72%, பருப்பு வகைகள் 22% வளர்ச்சி அடைந்துள்ளது. மஹாராஷ்டிர மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சியினால் பருப்பு ஏற்றுமதி குறைந்துள்ளதாக வேளாண் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாசுமதி ஏற்றுமதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ரூ 26,871 கோடியாக இருந்து Rs 32,806  கோடியாக உயர்ந்துள்ளது. மற்ற வகை அரிசிகளின் ஏற்றுமதி சற்று குறைந்தே உள்ளது. அதே போன்று கோதுமையின் ஏற்றுமதியும் குறைத்துள்ளது. கோதுமையினை ஏற்றுமதியனில்  ரஷ்யா   மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இந்தியர்களை விட மிகக்குறைந்த விலையில் வழங்குவதே இதற்கு காரணமாகும்.

புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையின் படி,  மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கை உரமிட்டு வளர்க்கப்பட்ட பொருட்களுக்கு உலக சந்தையினில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே மாநில அரசுகள் இதனை முறையாக ஊக்குவித்து  வந்தால் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும் என வேளாண் நிர்வாகம் கூறியது.

English Summary: Basmati Rice Exports Has Increased: Russia and Brazil were leading in Wheat Production
Published on: 11 May 2019, 03:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now