News

Thursday, 30 March 2023 09:36 PM , by: R. Balakrishnan

New Sim Card

இந்தியாவில் போலியான அடையாள அட்டைகளை கொடுத்து சிம் கார்டு வாங்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புதிய சிம் கார்டு (New Sim Card)

இந்தியாவில் இன்றைக்கு மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவும் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலியான அடையாள அட்டைகளை காண்பித்து சிம் கார்டு வாங்கும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் புதிய சிம் கார்டு பெறுபவர்கள் தங்களது அடையாள ஆவணத்தை காண்பித்து அதன் அடிப்படையில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சிம் கார்டு வழங்கப்படும்.

இந்த நிலையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாடு முழுவதும் பலர் சிம்கார்டு பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தவறான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியிருந்தால் அவர்களின் மொபைல் எண் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை போலி ஆதாரங்களை காண்பித்து சிம் கார்டு பெற்ற 15 லட்சம் மொபைல் எண்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது பிளாக் செய்யப்பட்டுள்ள எண்கள் சில நாட்களுக்கு பிறகு வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

ஏப்ரல் முதல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு: வெளியான நற்செய்தி!

MRP-ஐ விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)