மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 December, 2022 11:19 AM IST
Next Cyclone Warning

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மழையை உருவாக்கியது. இது கடந்த 10ம் தேதி சென்னையையொட்டி கரையை கடந்த பின்னரும் மழை தொடர்ந்து பெய்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

மாண்டஸ் அரபிக் கடலில் கலந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மீண்டும் உருமாறி மேற்று நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது இதானல் பெரிய அளவு பாதிப்பு இல்லையென்றாலும் தென்கிழக்கு வங்கக்கடலில் புதியதாக வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மெல்ல வலுவடைந்து இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் (Cyclone)

மேலும் இது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வரும் 17ம் தேதி வரை மேற்கு நோக்கி நகரும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல வரும் நாட்களில் இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி இலங்கையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

விவசாயிகள் அச்சம்

சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் வாடல் நோயால் பாதிப்பு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது அறுவடை காலம் நெருங்கி வருவதால் மழை மேலும் நீடித்தால் பருத்தியை அறுவடை செய்ய முடியாது என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல அடுத்து வரும் சில நாட்களில் நெல் மற்றும் கரும்பு அறுவடை செய்ய உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் புயல் தாக்கினால் இந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் எதிர் வரும் மழைக்கு தாக்கு பிடிக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்த வேளாண் துறை: விவசாயிகளுக்கும் கட்டுப்பாடு!

அரபிக்கடல் பகுதிகளில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழைக்கு வாய்ப்பு!

English Summary: Be Ready for Next Cyclone: Meteorological department Warning!
Published on: 15 December 2022, 11:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now