News

Wednesday, 07 September 2022 07:06 PM , by: T. Vigneshwaran

Beetroot

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள மார்க்கையன்கோட்டை சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளில் மிளகாய், சீனி அவரைக்காய், அவரைக்காய் , தக்காளி உள்ளிட்ட காய்கறி விவசாயத்தை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்ரூட் விலை அதிகமாக இருந்ததால் இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் பீட்ரூட் பயிரிட தொடங்கினர்.

குறிப்பாக சின்னமனூர் பகுதியை சுற்றியுள்ள கன்னிசேர்வைபட்டி, சின்ராமகவுண்டன்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், முத்தலாபுரம், அய்யம்பட்டி, புலிக்குத்தி, தர்மத்துப்பட்டி, சிந்தலச்சேரி, சங்கராபுரம், குச்சனூர், பொட்டிப்புரம், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, அய்யனார்புரம், அப்பிபட்டி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாட்டு பீட்ரூட் மற்றும் தனியார் ரக பீட்ரூட் விதைகளைக் கொண்டு பீட்ரூட் சாகுபடியை செய்து வருகின்றனர்.

பீட்ரூட் விலை அதிகரித்து இருந்த நேரத்தில், 70 நாட்களில் அறுவடைக்கு வரும் குறுகிய கால பயிரான பீட்ரூட் சாகுபடி செய்தால் லாபம் பெறலாம் என்ற நோக்கில் சின்னமனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் பிட்ரூட் விவசாயம் செய்தனர்.

ஒரே நேரத்தில் அதிகப்படியான விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி செய்ததன் காரணமாக பீட் ரூட்டின் வரத்து அதிகமானது. இதன் காரணமாக பீட்ரூட்டின் விலை சரிந்து வருகிறது. விவசாயிகளிடமிருந்து 60 கிலோ எடை கொண்ட பீட்ரூட் மூட்டை 650 முதல் 700 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
 
மேலும் படிக்க 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)