மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 November, 2020 8:14 PM IST
Credit : OneIndia

கிஷான் கிரெடிட் கார்ட் (Kishan Credit Card) மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) தெரிவித்துள்ளார்.

நிதி பேக்கேஜ் அறிவிப்புகள்:

பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை கடந்த மே மாதம் வெளியிட்டார். இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை (Economic plans) அறிவிக்க உள்ளார். இந்தியா தற்போது மாபெரும் பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்ல போவதாக ஆர்பிஐ (RBI) கணித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக திட்டமிடப்பட்டு இந்த நிதி பேக்கேஜ் அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது.

விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி:

ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம், 28 மாநிலங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 68.8 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர். தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு அமைச்சர்கள் இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். நபார்ட் (NABARD) நிதி மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கிஷான் கிரெடிட்:

கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவசரகால கடன் திட்டம் மூலம் 2.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 61 லட்சம் பேருக்கு அவசரகால கடன் திட்டம் (Emergency loan plan) மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,32,800 கோடி வருமான வரி 39.7 லட்சம் பேருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசரகால ஊக்க கடன் திட்டம் மார்ச் 31, 2021 வரை தொடரும், என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மூங்கிலில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்

குறைந்தது பருத்தி சாகுபடி! மாற்றுப் பயிர்களில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

English Summary: Billions in financial assistance to agriculture! 2.5 crore farmers benefited! Listed by Nirmala Sitharaman!
Published on: 13 November 2020, 08:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now