News

Wednesday, 03 October 2018 11:37 AM

தமிழகத்தில், நான்கு மாவட்டங்களில், பாரம்பரிய முறையிலான, பல்லுயிர் பரவல் குழுக்கள் அமைக்க, மத்திய அரசின், தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்திடம், அனுமதி கோரப்பட்டுள்ளது.தமிழகத்தில், வனப் பகுதிகளை பாதுகாப்பது போன்று, உயிரின வளங்களை பாதுகாப்பதற்காக, மாநில பல்லுயிர் பரவல் வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

'பயோ டைவர்சிட்டி' எனப்படும், பல்லுயிர் பரவல் தொடர்பான, மத்திய அரசின் திட்டங்கள், வழிகாட்டுதல்கள் அடிப்படையில், உயிரின வளங்களை பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, தமிழகத்தில், 15 இடங்களில், பல்லுயிர் பரவல் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக, திருவாரூர் மாவட்டம் - குடியம், திருவண்ணாமலை மாவட்டம் - குள்ளர் குகை, நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை, கடலுார் மாவட்டம் - சேந்திராங்கிள்ளை ஆகிய நான்கு இடங்களில், பல்லுயிர் பரவல் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)