News

Thursday, 04 April 2019 06:46 PM

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பொதுத்துறை நிறுவங்களில் பி.எஸ்.என்.எல்- லும் ஒன்று. தொலைத்தொடர்பு நிறுவனமான இது பல ஆண்டுகளாக தனது சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

ரிலைன்ஸ் ஜியோ, போன்ற தனியார் நிறுவனங்களின் அதிரடி சலுகைகள், புதிய தொழில்நுட்பம் போன்ற காரணங்களினால் பொதுத்துறை நிறுவனமான  பி.எஸ்.என.எல் - ன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  கனிசமாக குறைய தொடங்கிவிட்டனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடியினை சந்தித்து வருகிறது.

நாடு முழுவதும் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். நிறுவனத்தின் வருவாயில் 55% ஊழியர்களின் சம்பளதிற்காக  செலவிட படுகிறது. இவற்றை சமாளிக்க அதிரடியாக சில முடிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. முதலாவதாக ஓய்வு பெரும் வயதை 60 - ல் இருந்து 58- ஆக குறைக்க உள்ளது.  மேலும் 50 வயதிற்கு மேல் இருக்கும் அனைவருக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம் போன்றவற்றை செயல் படுத்தவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அமுல்படுத்தபடும் என எதிர் பார்க்கப்படுகிறது.    

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)