News

Friday, 05 July 2019 01:50 PM

பாஜக அரசு இன்று முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இன்று முதல் முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய முறைப்படி ஆவணங்களை கொண்டு வந்தார்.     

இரண்டாவது முறையாக மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

வழக்கமாக முன்னாள் நிதி அமைச்சர்கள் தாக்கல் செய்யவரும் போது ஆவணங்களை சிவப்பு நிற லெதர் சூட்கேஸில் தான் எடுத்து வந்தனர்.  ஆனால் இம்முறை சிறு மாற்றத்துடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய பாரம்பரிய முறைப்படி ஆவணங்களை கொண்டு வந்தார்.

நம் பாரம்பரிய முறையில் ஆவணங்களையும், கணக்குகளையும் ஒரு துணியில் கட்டி வைத்திருப்பார்கள். இதை இந்தியில் "பஹி காட்டா" என்பர். மேலும் மேற்கத்திய பாரம்பரிய அடிமைத்தனத்தின் புறப்பாடுதான் இந்த   "பஹி காட்டா"

ஒரு சிவப்பு துணியில் மஞ்சள்,சிவப்பு நிற ரிப்பன் கட்டி அதன் மேல் இந்திய அரசின் சின்னம் வைக்கப்பட்டு  பாரம்பரிய  முறைப்படி முதல் முறையாக ஆவணங்களை கட்டிக்கொண்டு வந்தவர் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)