News

Wednesday, 01 February 2023 12:54 PM , by: T. Vigneshwaran

Budget 2023

2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ரயில்வே, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை அறிவித்த அவர், வருங்காலங்களில் 1 கோடி விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றார்.

நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் அலையாத்தி காடுகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போக்குவரத்து திட்டங்களை மேம்படுத்த 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,

அனைத்து அரசு சேவைகளுக்கும் அடையாள அட்டையாக பான் அட்டை பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். ஏப்ரல் 1 முதல் சிறு குழு நிறுவனங்களுக்கு பிணையில்லாக் கடன் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மேலும் படிக்க:

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி?

SBI- வட்டியுடன் சேர்த்து மாதத் தவணைகளில் கிடைக்கும் பணம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)