மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 October, 2020 4:03 PM IST
Credit : Fruitnet.com

ஆயுத பூஜையை (Ayudha Poojai) முன்னிட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பூஜையின்போது சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்ச், வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை (Fruits) வைத்தும், தேங்காய், வெற்றிலை பாக்கு, பொரி, கடலை, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை படையலிட்டு வழிபடுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா (Corona) தொற்று அதிகளவு பரவிய நிலையில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் எளிய முறையில் ஆயுதபூஜை வழிபாடு நடத்தப்பட்டது. இதனால், வழக்கத்தை விட இந்தாண்டு சேலம் மாவட்டத்தில் பொரி மற்றும் பழங்கள் விற்பனை சரிந்தது.

50% விற்பனை குறைவு:

ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொள்முதல் (Purchase) செய்தோம். ஆப்பிள் கிலோ ரூ.140, சாத்துக்குடி ரூ.80, ஆரஞ்ச் ரூ.100, வாழைப்பழம் சீப்பு ரூ.50, சீத்தாப்பழம் ரூ.40, எலுமிச்சை பழம் ஒன்று ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு பழங்கள் விலை குறைந்திருந்தாலும், வாங்குவோரின் எண்ணிக்கையும், வாங்கும் பொருட்களின் அளவும் குறைந்தது. இதனால், அதிகளவு இருப்பு வைத்து பழங்களை விற்பனை செய்ய காத்திருந்த வியாபாரிகள்(Merchants) ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு பழங்கள் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது என்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்!

நெல் கொள்முதல் கடந்த ஆண்டைவிட 23 சதவீதம் அதிகம்!

English Summary: By Corona, fruit sales at Ayidha Poojai reduced by 50%!
Published on: 27 October 2020, 04:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now