மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 July, 2019 12:33 PM IST

கர்நாடக முன்னாள் முதல்வர், பாஜக மூத்த அரசியல்வாதியுமான எஸ்.எம் கிரிஷ்ணாவின் மருமகனும் மற்றும் கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி. சித்தார்த்தா நேற்று முன் தினம் மாலை (திங்கள்கிழமை) மாயமானார்.

இதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை சித்தார்த்தாவின் சடலம் ஹோய்கேபஜார் நதிக்கரையில் கிடைத்துள்ளதாக தக்ஷின கன்னடா துணை கமிஷனர் எஸ்.செந்தில் கூறினார்.

தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள நேத்ராவதி பாலத்தில் காரை நிறுத்த கூறி தனது ஓட்டுனரிடம் சற்று நடந்து விட்டு வருவதாக சொல்லிச்சென்ற சித்தார்த்தா பலமணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து  காவல் துறையில் ஓட்டுநர் அளித்த புகாரில் 200 க்கும் மேற்பட்ட போலீஸார், 25கும் மேற்பட்ட படகுகள் கொண்டு தேடுதலை தீவிர படுத்தினர்.

இதற்கிடையில், அவர் ஊழியர்களுக்கும், நிர்வாகக் குழுவினருக்கும் எழுதிய கடிதம் கிடைத்தது  மற்றும் மீனவர் ஒருவர் அளித்த தகவலின் படி சித்தார்த்தா நீரில் குதித்து தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று, உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். நீரோட்டத்தின் அடிப்படையில் சடலம் எங்கு கரை ஒதுங்கும் என்ற தீவிர தேடுதலுக்கு பின் ஹோய்கேபஜார் பகுதியில் ஐஸ் கட்டி தயாரிப்பு தொழிற்சாலைக்கு அருகில் சித்தார்த்தாவின் சடலம் இன்று அதிகாலை கிடைத்துள்ளது.

சித்தார்த்தா காணாமல் போனதை கார் ஓட்டுநர் உறுதியாக கூறியதாலும், மீனவர் அளித்த தகவலின் படியும் போலீஸார் நடத்திய தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் சித்தார்த்தாவின் சடலம் கிடைத்துள்ளது.   

k.Sakthipriya
krishi Jagran

English Summary: Cafe Coffee Day Founder V.G Siddartha's body Found in Netravati River
Published on: 31 July 2019, 12:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now