மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 December, 2022 4:58 PM IST

பொங்கல் பரிசுப் பொருட்களில் முந்திரி விநியோகம் 2010 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டதில் இருந்து நடைமுறையில் உள்ளதாக  தமிழ்நாடு  முந்திரி பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுபொருட்களில் முந்திரி இல்லாதது முந்திரி விவசாயிகளுக்கும் முந்திரி விற்பனையாளர்களுக்கும் மிகுந்த வேதனை அளிப்பதாக, இச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முந்திரியை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு முந்திரி பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TNCPEA) தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்,  முந்திரி பதப்படுத்துபவர்கள்  மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் M.ராமகிருஷ்ணன், "கடலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்துதல் பாரம்பரியமாக 3,000 யூனிட்டுகள் உள்ள முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர்" என்று கூறியுள்ளார் .

கடந்த 2010ம் ஆண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுபொருட்களில் முந்திரி சேர்க்கப்படும் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்கிறது.

இதனை கருத்தில் கொண்டு மீண்டும் முந்திரியை  பொங்கல்பரிசில்  சேர்க்க  வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளால் முந்திரி தொழில் ஏற்கனவே கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய திரு. ராமகிருஷ்ணன், அறிவித்த  பொங்கல் பரிசுபொருட்களில்  முந்திரியையும் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.

முந்திரியைச் சேர்ப்பது தொழில்துறையைப் பாதுகாக்கும் மற்றும் இந்தத் துறையில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும். எனவே, பரிசுபொருட்களின் ஒரு பகுதியாக அரசு முந்திரியை மீட்டெடுக்க வேண்டும், என்றார்.

இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும்  ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல்  பரிசுபொருட்கள் வழங்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு அரசு தெரிவித்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரசு கரும்புகளை கொள்முதல் செய்யாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று கூறினர். மேலும் பல எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தன,  வழக்கு ஒன்று தொடரப்பட்டு ஒத்திவைக்கவும் பட்டது. பின்னர்  தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு முழு கரும்பும், பரிசுத் தடையும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

இயற்கை விவசாயத்தின் விதை: நம்மாழ்வார்-இன் நினைவு நாள் இன்று

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம் - 30ம் தேதி முதல் டோக்கன்

English Summary: Can cashews be included in Pongal gifts?
Published on: 30 December 2022, 04:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now