மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 December, 2020 4:40 PM IST
Credit : Vikatan

பொங்கல் பரிசுடன், கரும்பு வழங்க வேண்டியிருப்பதால், கூட்டுறவுத் துறையினர், கரும்பு விவசாயிகளை (Sugarcane farmers) தேடிப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பரிசுடன் கரும்பு:

தமிழக அரசு, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு பொருட்கள் (Pongal Gift) வழங்க உத்தரவிட்டு உள்ளது. மாநிலத்தில், 2.10 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு பொருள் வழங்கப்பட உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, பயனாளிகளுக்கு, இரண்டு அடி நீளமுள்ள கரும்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு, ஒரு முழுநீள கரும்பு வழங்கப்படுமென, அரசு அறிவித்துள்ளது.

கரும்பு கொள்முதல்

கரும்பு கொள்முதலுக்கு (Purchase) மட்டும், 61.90 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஏற்றுதல் மற்றும் இறக்குக்கூலி, லாரி வாடகை என, இதர செலவுகளையும் சமாளித்து, கரும்பு கொள்முதல் செய்ய, தலா, 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கொள்முதல் செய்ததை காட்டிலும், மூன்று மடங்கு அதிகம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு பொங்கலுக்கு, 2.6 கோடி கரும்புகள் கொள்முதல் செய்ய வேண்டும். பயிர்க்கடன் (crop loan) பெற்ற, கரும்பு விவசாயிகள் விபரத்தை பெற்று, நேரில் சென்று கரும்பு கொள்முதல் செய்யப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (Start-up Agricultural Cooperative Credit Unions) மூலம், கரும்பு விவசாயிகளை தேடிப்பிடிக்கும் பணி துவங்கியுள்ளது என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறினர்.

பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது விவசாயி விளைவிக்கும் கரும்பு தான். தமிழக அரசு பொங்கல் பரிசுடன் கரும்பு கொடுக்கவிருப்பதால், கரும்பு கொள்முதல் அதிகரிக்கும். இதனால், எண்ணற்ற கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தென்னை நார் தொழிலில் வருமான வாய்ப்பு! மதிப்புக் கூட்டினால் நல்ல இலாபம்!

6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பம்! பாரம்பரியத்தை விரும்பும் பட்டதாரி!

English Summary: Cane with Pongal gift! Government in search of farmers to buy!
Published on: 23 December 2020, 04:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now